#worldnews

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணி தீவிரம்…!!!

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணி தீவிரம்…!!! இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சிலர் சுரங்கங்களில் சிக்கியுள்ளனர். அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள உம்ராங்சு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் சிலர் வேலை செய்து கொண்டிருந்தபோது வெள்ளத்தில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிலாளர்கள் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக இறங்கினர். சுரங்கத்தில் குறைந்தது 27 தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் பலர் வெளியேறியதாக கூறப்படுகிறது. நிலக்கரிச் சுரங்கம் நிலத்தடி நீரில் …

நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரை மீட்கும் பணி தீவிரம்…!!! Read More »

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!!

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஒரு தம்பதியினர் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சவாரி செய்துள்ளனர். இந்த ஜோடியின் அதிரடி வீடியோ டிக்டோக்கில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதியினர் வீட்டில் மலைப் பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அரை மணி நேரம் கடந்தும் யாரும் வராததால் வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதால் தம்பதியினர் தாங்களாகவே வீட்டில் இருந்து …

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!! Read More »

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!!

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!! ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் பந்து போட்டியில் வியட்நாம் வெற்றி பெற்றது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தாய்லாந்து மற்றும் வியட்நாம் அணிகள் மோதின. இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 10 பேர் கொண்ட நடப்பு சாம்பியனான தாய்லாந்து அணியை வியட்நாம் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வியட்நாம் 2-1 என்ற …

ஆசியான் சாம்பியன்ஷிப் காற்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற வியட்நாம் அணி…!!! Read More »

உழைத்து சம்பாதித்த பணத்தை நன்கொடையாக அளிக்கும் நபர்..!!!

உழைத்து சம்பாதித்த பணத்தை நன்கொடையாக அளிக்கும் நபர்..!!! பிரான்ஸைச் சேர்ந்த 43 வயதான திரு.யான் ஐட்பச்சிர் என்பவர் பகுதி நேரமாக வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை நன்கொடையாக வழங்குகிறார். 2009 முதல் சிங்கப்பூரில் வசிக்கும் அவர், கிராப்பின் பகுதி நேர விநியோகஸ்தராகப் பணியாற்றுகிறார். வார நாட்களில் வேலை முடிந்து கிடைக்கும் நேரத்திலும் வார இறுதி நாட்களிலும் திரு. ஐட்பச்சிர் உணவு விநியோகிக்கச் செல்வார். வாரத்திற்கு 10 மணி நேரம் வேலை செய்ததிரு. ஐட்பச்சிர் கடந்த ஆண்டு …

உழைத்து சம்பாதித்த பணத்தை நன்கொடையாக அளிக்கும் நபர்..!!! Read More »

புதுடெல்லியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு…!!!

புதுடெல்லியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு…!!! இந்திய தலைநகர் புதுடெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 19 விமானங்கள் பாதை மாற்றப்பட்டது. பல சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன. இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நாட்டின் பிற விமான நிலையங்களிலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக பனிமூட்டம் …

புதுடெல்லியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு…!!! Read More »

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்?

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மூன்று பேர் டோட்டோ (TOTO) புத்தாண்டு அதிர்ஷ்டக் குலுக்கல் டிக்கெட்டுகளை வாங்கி 11.6 மில்லியன் வெள்ளியை வென்றுள்ளனர். ஒவ்வொருவரும் சுமார் 3.9 மில்லியன் வெள்ளித்தொகையை பரிசாக வென்றனர். அதிர்ஷ்ட குழுக்களின் முடிவுகள் நேற்று(ஜனவரி 3) வெளியிடப்பட்டன. வெற்றி எண்கள்: 9, 11, 24, 29, 39, 46 கூடுதல் எண்: 31 அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் யாரும் குழு ஒன்றின் பரிசைப் …

TOTO புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல் முடிவு வெளியீடு!! மில்லியன் தொகையை வென்றவர் யார்? Read More »

இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்…!!!

இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்…!!! இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 65 வயதான பாண்டுரங் உல்பே என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தினர். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உறவினர்கள் பலர் வீட்டில் திரண்டனர். அவர்கள் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். கடன் மிரட்டலில் ஈடுபட்ட நால்வர்!! புகார் கிடைத்த நாளிலேயே …

இறந்ததாக அறிவித்த நபர் மீண்டும் உயிர் பெற்று வந்த அதிசயம்…!!! Read More »

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!!

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Sunway lagoon பூங்காவில் Pinkfish Festival நிகழ்ச்சி முடிவடைந்த சில மணி நேரத்தில் நான்கு பேர் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். அவர்கள் 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். தனியார் வாடகை வாகனச் சேவை மற்றும் உணவு விநியோகச் சேவை- வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்!! மேலும் அவர்கள் நச்சு உட்கொண்டனரா …

மலேசியாவில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம்!! ஒன்றன் பின் ஒன்றாக நான்கு பேர் திடீர் மரணம்!! Read More »

சீனாவில் மோதிக்கொண்ட கப்பல்கள்!! ஊழியர்களின் நிலைமை!!

சீனாவில் மோதிக்கொண்ட கப்பல்கள்!! ஊழியர்களின் நிலைமை!! சீனாவின் Changjiang ஆற்றில் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியன்று சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஜப்பானிய கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக சிங்கப்பூர் கடல் துறை, துறைமுக ஆணையம் தெரிவித்தது. அதில் இருந்த ஊழியர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் கப்பலான YANGZE-22 வின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டது. Hengsha East இல் கப்பலின் சேத மதிப்பீட்டிற்காக நங்கூரமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அனுபவம் இல்லாதவர்களுக்கு வெளிநாட்டில் வேலை …

சீனாவில் மோதிக்கொண்ட கப்பல்கள்!! ஊழியர்களின் நிலைமை!! Read More »

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!!

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! டிசம்பர் 29-ஆம் தேதி Jeju air விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் பலியாகினர். அந்த விபத்திற்கு பிறகு பயணிகள் தங்களது விமான சீட்டுகளை ரத்து செய்ததாக அந்நிறுவனம் கூறியது. அதிலும் குறிப்பாக தாங்கள் எந்த ரக விமானத்தில் செல்கிறோம் என்று பயணிகள் கேட்டு விசாரிப்பதாகவும், பயண முகவர் நிறுவனங்கள் கூறின. தென் கொரியாவில் புகழ்பெற்ற ஒரு பயண முகவர் நிறுவனத்தில் 400 பேரிடம் இருந்து தங்களுக்கு அழைப்பு …

Jeju air விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பயணிகள்!! Read More »