ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!!

ஜப்பானில் இன்னும் பனிப்பொழிவு அதிகரிக்கலாம்!! மக்களுக்கு எச்சரிக்கை!!

ஜப்பானில் பனிப்பொழிவு மற்றும் காற்று அதிக அளவில் கடுமையாக இருக்கும், ஜப்பான் கடலில் வீசும் குளிர் காற்று காரணமாக பனிப்புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாள் முழுவதும் பனிமூட்டம் அதிக அளவில் உருவாகும் என்றும் பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை குளிர்ந்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் பனிப்பொழிவு மேலும் அதிகரித்து பனி வழக்கமாக பெய்யாத இடங்களில் கூட அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.

6 மணி நேரத்திற்குள் ஒரு நகரில் 29 சென்டிமீட்டர் பனி கொட்டியுள்ளதாக ஜப்பான் ஊடகம் ஒன்று தெரிவித்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் 100 சென்டிமீட்டர் அளவு பனிப்பொழியும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளின் சில பகுதிகள் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பனிமூட்டம் காரணமாக விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பனிச்சரிவு மற்றும் மின்தடை ஆகியவை ஏற்படலாம் என அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்தனர்.