11 மாதக் குழந்தை தூங்க மறுத்ததால் கிள்ளி கடித்து துன்புறுத்திய பணிப்பெண்!!
11 மாத குழந்தை தூங்க மறுத்ததால் கடித்து கிள்ளி துன்புறுத்திய 24 வயதுடைய மியான்மர் நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் உடலில் காயங்கள் தழும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பகல் நேரங்களில் ஓய்வில்லாமல் வேலை செய்வதாகவும் குழந்தை நன்றாக தூங்கிய பிறகு தான் தூங்க செல்வதாகவும் அந்தப் பெண்மணி கூறினார்.
இதனால் தமக்கு அன்றாடம் போதுமான அளவு தூக்கம் இல்லை என்றும் அந்த பணிப்பெண் கூறினார்.
வேலை செய்யும் வீட்டில் மொத்தம் மூன்று குழந்தைகளை அவர் கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.