A man tried to attack a woman with a stick He also attacked a police officer, causing a stir!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!!

பெண்ணை தடியால் தாக்க முயன்ற நபர்!! காவல்துறை அதிகாரியையும் தாக்கியதால் பரபரப்பு!!

A man tried to attack a woman with a stick He also attacked a police officer, causing a stir!!

சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரியை தாக்கி காயப்படுத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 15ஆம் தேதி சுமார் 7.35 மணியளவில் வாம்போ டிரைவில் உள்ள பிளாக் எண் 81 லிருந்து காவல்துறைக்கு தகவல் வந்ததாக கூறியது.

அங்கு 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தடியால் பெண்ணை அடிக்க முயற்சி செய்ததை கண்டதாக அங்கிருந்த மக்கள் காவல்துறையினரிடம் கூறினர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த நபர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் அந்த நபரின் அடையாளம் மற்றும் அவர் இருக்கும் இடத்தையும் காவல்துறை கண்டுபிடித்து. அவரை கைது செய்வதற்கு காவல்துறை முயற்சி செய்த போது அந்த நபர் ஒத்துழைக்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறினர்.

அந்த நபர் 49 வயதுடைய காவல்துறை அதிகாரியின் மீது தடியால் தாக்கியும், மேலும் அவர் மீது குவளையையும் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த காவல்துறை அதிகாரிக்கு தலை மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அரசாங்க அதிகாரியை ஆபத்தான ஆயுதங்களுடன் காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி தண்டனையாக விதிக்கப்படலாம்.

அரசாங்க அதிகாரியின் கடமையை செய்யவிடாமல் தடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் மற்றும் பிரம்படி தண்டனையாக விதிக்கப்படலாம்.

மேலும் அந்த நபர் செய்ததாக நம்பப்படும் பிற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் அவர் இன்று(பிப்ரவரி 17) இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்.