சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது?

சிங்கப்பூர் : கண்களுக்கு மீண்டும் விருந்தளிக்க வரும் சிங்கே ஊர்வலங்கள்!! எங்கே? எப்போது?

சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை 8 வாரங்களுக்கு மீண்டும் குடியிருப்பு வட்டாரங்களில் சிங்கே ஊர்வலங்கள் நடைபெறும் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.

மகிழ்ச்சி மற்றும் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் மீண்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய 9 வண்ணமயமான மிதவைகள்,மக்கள் மத்தியில் உலா வரும் கலைஞர்கள், பல இன சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் 17 நிமிட மேடை நிகழ்ச்சிகள் எனப் பலவிதமான கண்கவர் நிகழ்ச்சிகள் அதில் இடம்பெறும்.

கொண்டாட்டங்களை எந்தெந்த இடங்களில் காணலாம்:

▫️ பிப்ரவரி-9: மரின் பரேட் வட்டாரம்

▫️பிப்ரவரி-15: அங் மோ கியோ, கெபுன் பாரு, இயோ சூ காங் வட்டாரம்

▫️பிப்ரவரி -16: ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரம்

▫️பிப்ரவரி 21 : தெம்பனிஸ் வட்டாரம்


▫️பிப்ரவரி-21: மார்சிலிங் யூட்டி வட்டாரம்

▫️பிப்ரவரி-22: பாசிர் ரிஸ் வட்டாரம், பொங்கோல் வட்டாரம்

▫️மார்ச்-1:பீஷான், தோ பாயோ,மேரி மவுண்ட் வட்டாரம்.

▫️மார்ச்-2: சுவா சூ காங்,ஹோங் கா நார்த் வட்டாரம்.