இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!!

இஸ்ரேலில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயம்..!!!

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடந்த மற்றொரு கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

தாக்குதலை நடத்திய 28 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கடந்த சனிக்கிழமை (ஜனவரி 18) டெல் அவிவ் நகரில் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் நடந்தது.

இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது போன்ற சம்பவங்கள் இரண்டாவது முறையாக நடைபெறுவதால் அதிகாரிகள் இதை தீவிரவாத தாக்குதலாக வகைப்படுத்தியுள்ளனர்.