கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வரிகளுக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தை சுமார் 6 டிரில்லியன் டாலரை இழந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்ற கவலை நிலவுகிறது.
ஒரே நேரத்தில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு சவாலாக அமையக்கூடும் என்றும், மேலும் அது பொருளாதார நிச்சயமற்ற நிலையை நீட்டிக்கும் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.