அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!!

அமெரிக்கா அதிபர் விதித்த வரி!! அமெரிக்காவுடன் பேச்சு நடத்த விரும்பும் நாடுகள்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை தொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகள் வெள்ளை மாளிகையை தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

அந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளியல் ஆலோசகர்கள் அவர் விதித்த வரிகள் குறித்து தற்காத்து பேசியுள்ளனர்.

உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் நிலையை வலிமையாக்கும் முயற்சியே இந்த வரிகள் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட வரிகளுக்கு பிறகு அமெரிக்க பங்குச் சந்தை சுமார் 6 டிரில்லியன் டாலரை இழந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள வரிகள் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்ற கவலை நிலவுகிறது.

ஒரே நேரத்தில் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது டிரம்ப் நிர்வாகத்திற்கு ஒரு சவாலாக அமையக்கூடும் என்றும், மேலும் அது பொருளாதார நிச்சயமற்ற நிலையை நீட்டிக்கும் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.