மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்குள் கடத்த முயன்ற 120 கிலோ கடல் வெள்ளரிகள் பறிமுதல்..!!

மலேசியாவிற்கு பதப்படுத்தப்படாத கடல் வெள்ளரிகளை கடத்தும் முயற்சியானது ஜொகூரில் முறியடிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முறையான அனுமதியின்றி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதனால் பொருட்களை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

200 பொட்டலங்களில் அடைக்கப்பட்டு இருந்த கடல் வெள்ளரிகளின் எடை 120 கிலோகிராம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவை 4 பீப்பாய்களில்
அடைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் மதிப்பு 12,000 ரிங்கிட் (சுமார் 3,700 வெள்ளி) என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் (30,830 வெள்ளி), அதிகபட்சம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==